Description
பழம்பெரும் கடவுளான முருகனின் பெருமைகளை அருணகிரிநாதர் முதற்கொண்டு 1160 அடியவர்கள் பாடியுள்ளனர். அவ்வாறு பாடியவர்களின் குறிப்புகள் மற்றும் பல செய்திகள் இந்நூலில் சுருக்கமாகவும், எளிமையாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மேலும் முருகப்பெருமான் தெய்வானை, வள்ளி இருவரையும் மணந்த நிகழ்வுகளையும், அவரை வழிபட்டு மேற்கொள்ளும் விரதங்களில் மிகச்சிறப்புடையதான கந்த சஷ்டி விரதம் பற்றியும், அதனால் பெறும்பயன்கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: மா.கி.ரமணன்















