Description
கோயில் சொத்துகள் பலரால் அனுபவிக்கப்பட்டு வந்தன. இதனையெல்லாம் முறையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று ஓமந்தூரார் அவர்கள் கருதினார். இதனால் ‘கோயில்களின் நிர்வாக முறையில் அடிப்படையான மாறுதல்கள் தேவை’ என்ற எண்ணம் ஓமந்தூராருக்குத் தோன்றியது. அதனடிப்படையில் முதலமைச்சரான பின்பு இந்து சமய அறநிலையத்துறைக்கென புதிய அறநிலையச் சட்டத்தினைக் கொண்டு வந்தார். இதன்மூலம் கோயில் சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது, சில சுயநல சக்திகளால் ஆக்கிரமிக்கப்படுவது, கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது போன்றவற்றிற்கு முடிவுகட்டப்பட்டது.
மேலும் இந்நூலில் ‘செந்தமிழ்ச்செல்வி’ என்ற திங்களிதழில் வெளிவந்த தமிழில் வழிபாடு, தமிழாட்சி, தமிழ்நாடே உலகின் கலைக்கோயில் உள்ளிட்ட கட்டுரைகள் இடம்பெற்று இந்நூலுக்குச் சிறப்பு சேர்த்துள்ளன.
ஆக்கம்: ஓமந்தூரார் சட்டமன்ற உரை மற்றும் செந்தமிழ்செல்வி கட்டுரைகளின் தொகுப்பு















Reviews
There are no reviews yet.