Description
அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள அந்தம் என்பது ‘முடிவு’ என்றும் ஆதி என்பது ‘முதல்’ என்றும் பொருள்படும். முடிவை முதலாகப்பெற்று அமைவது அந்தாதியாகும். அதனடிப்படையில் திருவானைக்காவல் தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது சொ.சிங்கார வடிவேலர் பாடியதே திருவானைக்கா அந்தாதி என்னும் இந்நூல்.
இத்தலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் தலமாகும். இத்திருக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 60-வது தேவாரத்தலம் ஆகும்.
ஆசிரியர்: சோ சிங்காரவடிவேல்










Reviews
There are no reviews yet.