Description
சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருவுருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம். சப்தவிடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையான கோயிலாகும். தேவாரப்பாடல்களில் அதிகப் பாடல்களை இத்தலம் பெற்றிருக்கிறது. நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே கோட்டில் அமைந்து காட்சி தருவது இத்தலத்தில்தான். அத்தகு பெருமைமிகு திருவாரூர் கமலாலயத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள கமலாம்பிகை மீது பாடப்பட்டது “கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்” ஆகும். இதனைப் பாடியவர் வைத்தியநாத தேசிகர் ஆவார்
ஆசிரியர்: வைத்தியநாத தேசிகர்















Reviews
There are no reviews yet.